×

சாகுபுரம் அருகே வளைவு பாலத்தில் அபாய பள்ளம் தற்காலிகமாக சீரமைப்பு

ஆறுமுகநேரி, மே 7: சாகுபுரம் அருகே வளைவு பாலத்தில் இருந்த அபாய பள்ளம், தினகரன் செய்தி எதிரொலியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரையடுத்து சாகுபுரம் அருகே வளைவான பாலம் அமைந்துள்ளது. இந்த பாலப் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலத்தின் நடுவே உள்ள சாலையில் சுமார் 2 அடி ஆழம் 5 அடி அகலத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் சாலையின் வலது புறம் வந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் இப்பள்ளம் இருப்பது தெரியாமல் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இப்பள்ளத்தில் சிக்குவதால் வாகனங்கள் நிலை தடுமாறி சென்றன. ஆபத்தான வளைவில் இப்பாலம் அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இப்பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக கடந்த 24ம் தேதி தினகரனிலும் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சம்பந்த துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான பள்ளத்தை தற்காலிகமாக சரிசெய்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post சாகுபுரம் அருகே வளைவு பாலத்தில் அபாய பள்ளம் தற்காலிகமாக சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Sakupuram ,ARUMUGNERI ,HAZARD CREVINE ,SAGUPURAM ,DINAKARAN ,Thoothukudi- Thiruchendur road ,Athuraiyadu Sakupuram ,
× RELATED ரத்த அழுத்த பரிசோதனை முகாம்